சூர்யாவுக்கு இந்த படத்திற்காக ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என புகழ்ந்து தள்ளியுள்ளார் கன்னட நடிகர் சுதீப்.

Sudeep About Suriya in Soorarai Potru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மிகவும் எதார்த்தமான நடிப்பால் சூர்யா படத்திற்கு பலம் சேர்த்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்றது. ‌‌‌

டென்னிஸ் மின்னல்ஸ் : சானியா மிர்சா, ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சித் தோல்வி..

இந்த நிலையில் கன்னட நடிகரான சுதீப் நான் இறுதியாக OTT-யில் பார்த்த திரைப்படம் சூரரை போற்று. சூர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் இந்த படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்க வேண்டும். நான் சந்தித்த அரிய மனிதர்களில் இவரும் ஒருவர். போலித்தனம் இல்லாதவர்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி | HD

இது ஹீரோயிச படம் அல்ல. கேரியரில் உச்சத்தில் இல்லாத சமயத்தில் இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது துணிச்சலான ஒன்று என பாராட்டியுள்ளார். சுதீப் பங்கேற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா குறித்து இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.