சுச்சி லீக்சில் தனுஷ், அனிருத் சிக்கியது எப்படி என சுசித்ரா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவையே அதிர வைத்த சம்பவம் என்றால் அது சுச்சி லீக்ஸ் தான். இந்த லீக்சில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் சிக்கினர்.
ஆனால் இதெல்லாம் பாடகி சுசித்ராவின் அக்கவுண்டை ஹேக் செய்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் என கூறப்பட்டு வந்தன.
மேலும் சுசித்ரா இந்த சம்பவங்களால் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது சுசித்ரா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சுச்சி லீக்ஸ்கிற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இதில் தனுஷ், அனிருத் எல்லாம் எப்படி சிக்கினார்கள்? இதெல்லாம் யார் பார்த்த வேலை என இன்று வரை தெரியவில்லை. அவர்களின் பெயர்களை கெடுத்து விட்டார்கள் என கூறியுள்ளார்.