சுப்பிரமணியபுரம் ஸ்வாதி மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subramaniapuram Swathi Re-entry : தமிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுவாதி. இப்படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்ற விமானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரட்டை சதம் அடித்து, டெல்லி வீரர் சுபோத் புதிய சாதனை..

திருமணத்திற்குப் பிறகு இந்தோனேசியாவில் செட்டிலான சுவாதி மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தற்போது இவர் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்து தெலுங்கு படமொன்றில் கமிட் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறை! – இப்போ இதான் Trend | Thala Ajith | H.Vinoth

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ள நிலையில் சுவாதி படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பல கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.