கொரானா நிவாரண நிதியாக சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளார் ஸ்டண்ட் சில்வா.
Stunt Master Silva Contribution to CPS : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாவை நம்பியிருக்கும் பத்திரிக்கையாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் திரையுலக பிரபலங்கள் பிரபலங்கள் பலரும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு நிதி அளித்து வருகின்றனர். அஜித், கலைப்புலி எஸ் தாணு, பார்வதி நாயர் என உதவி செய்தவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்களும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.