சபரிமலை சென்றுள்ள சிம்பு புது சபதம் ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சமீப காலமாக தொடர் தோல்விகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.
அதே சமயம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பல சர்ச்சைகளுக்கு பிறகு கைவிடப்பட்ட மாநாடு படத்தில் மீண்டும் நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.
மேலும் 40 நாட்கள் விரதமிருந்து சபரி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிம்பு என்ன பத்தி பேசுனவங்களுக்கு எல்லாம் இருக்கு.. அவர்களுக்கெல்லாம் இனி வரும் என்னுடைய படங்கள் பதில் சொல்லும் என கூறியதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.
இதனால் சிம்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர், இனிமே பார்ப்பீங்க என் தலைவனோடு வெறித்தனமான ஆட்டத்தை எனவும் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.