சிம்புவை அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து ஏமாற்றி வந்தது தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
STR Controversy Problems Reason : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.
சிம்பு படப்பிடிப்பு சரியாக வருவதில்லை, சரியாக நடித்து கொடுப்பதில்லை என இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சூழல ஆரம்பித்தன. ஆனால் சிம்பு தரப்பில் இருந்து அவர் அப்படியெல்லாம் இல்லை என கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் இருவர் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
தீபன் பூபதி, தேவராஜ் என்ற இவர்கள் தான் இதுவரை சிம்புவின் கால்ஷீட் விவகாரம் போன்ற முக்கிய பணிகளை கவனித்து வந்துள்ளனர்.
இவர்கள் தான் சிம்பு ஞாயிற்று கிழமை நடிக்க வர மாட்டார் என்றெல்லாம் தயரிப்பாளர்களிடம் கூறி அவரின் பெயரை டேமேஜ் செய்துள்ளனர். சிம்புவும் நண்பர்கள் என்பதால் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து ஏமார்ந்துள்ளார்.
தற்போது இதெல்லாம் வெளிச்சத்துக்கு வரவே டி.ராஜேந்தர் அவர்கள் இருவரையும் தூக்கி விட்டு அனைத்து பணிகளையும் அவரே கவனிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் அவர் சிம்புக்கு பிடித்த சனி தொலைந்து விட்டது. இனி எல்லாம் நல்லதாக தான் நடக்கும் எனவும் டி.ஆரும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர்.