STR Condolences to Vasanthakumar Death
STR Condolences to Vasanthakumar Death

எம்பி வசந்தகுமார் அவர்களின் மறைவு குறித்து சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

STR Condolences to Vasanthakumar Death : தமிழகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் அவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் திரையுலகப் பிரபலங்கள் என பலரும் வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான சிம்புவும் வசந்தகுமார் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம், வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தவர். இவரிடமிருந்து ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏழை எளிய மக்களின் கல்விக்காக அரும்பாடுபட்டவர் எம்பி வசந்தகுமார் – தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல்

விளம்பரங்களில் பிராண்டில் முதலாளியே நடிக்கலாம் என முதன் முதலில் தொடங்கி வைத்தவர். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர்.

குடும்பத்தினர் மீது அன்பை செலுத்துவதை வலிமையாக்கி கொண்டவர் என வசந்தகுமார் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வசந்தகுமார் மறைவிற்கு தன்னுடைய இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையுடன் இதோ