STR Condolences to Kv Anand

சேர்ந்து படம் பண்ணலாம் என பேசி இருந்த நிலையில் தெரியாமல் மறைந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

STR Condolences to Kv Anand : தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமானவர் கே வி ஆனந்த். இவர் இயக்கிய கோ, அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

54 வயதான இவர் கொரானா ஏற்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு கே வி ஆனந்த் மறைவு குறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து கோ படத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். சில காரணங்களால் அந்த படத்தில் அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அதிரீந்து கூட பேசாத மனிதர் கே வி ஆனந்த். சமீபத்தில் எனக்கு ஒரு கதை கூறியிருந்தார். இருவரும் இணைந்து பணியாற்றலாம் என கூறியிருந்தேன். ஆனால் தற்போது அவர் இல்லை என்ற செய்தி நம்ப முடியவில்லை. இது பொய்யாக இருக்க கூடாதா என மனம் ஏங்குகிறது.

என் மீது அக்கறை கொண்டவர், தினமும் தொடர்பில் இருந்து வந்தார். தற்போது அவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. கே வி ஆனந்த் இருந்தால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து இருப்பார். அவரை இழந்து நிற்கும் ரசிகர்கள் பிரபலங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கரங்களில் அவர் இளைப்பாறட்டும் என தெரிவித்துள்ளார்.