STP Rosary is talking about Baakiyalakshmi serial
STP Rosary is talking about Baakiyalakshmi serial

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து பேசி உள்ளார் ரோசரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்தது போல் காட்டியுள்ளனர். இது குடும்பத்தினர் இடையே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன்பிறகு கதை எப்படி இருக்கும் என்ற பல சுவாரசியங்கள் நிறைந்திருக்கிறது.

அந்த வகையில் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ரோசரி இது குறித்து பேசி உள்ளார் அதில், ராமமூர்த்தி கேரக்டர் இனி முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டதாகவும், சீரியல் தரப்பில் முடிவெடுத்த பிறகு நாம் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.இருப்பினும், இறுதித் தருணம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று சீரியல் தரப்பினர் முடிவு எடுத்திருந்தார்கள். நானும் ஒரு நடிகர் அதனால் அதற்கு தகுந்தார் போல் நடித்து முடித்து விட்டேன் என்றும் இனி நான் இந்த சீரியலில் இல்லை என்பது ஒரு மாதிரி பீல் ஆகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் சொல்லி இருக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

இருப்பினும் ராமமூர்த்தி கதாபாத்திரம் இல்லாமல் கதை எப்படி நகரப் போகிறது? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது.ராமமூர்த்தி கதாபாத்திரத்தை நீங்க எவ்ளோ மிஸ் பண்றீங்க எங்களோடு கமென்டில் ஷேர் பண்ணுங்க…