சிம்புவின் கொரானா குமாரு படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Story Line of Corona Kumaru Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக சிம்பு கொரானா குமாரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை கோகுல் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது தமிழகத்தில் குறுநாவல் பாதிக்கப்பட்ட முதல் ஆளான சிம்புவை மருத்துவக்குழு தேடுகிறது. ஆனால் அவர்களிடம் சிக்காத சிம்பு ஜாலியாக அனைத்து இடமும் சுற்றித்திரிந்து வருகிறார். ஒரு கட்டத்தில் மருத்துவக் குழுவிடம் மாற்றிக்கொள்ள அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம் என தெரிய வந்துள்ளது. ‌‌‌‌‌

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch

திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

கலக்கலான காமெடியை மையமாகக் கொண்டு இந்தப் படத்தினை உருவாக்க உள்ளனர். விரைவில் படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இந்த வருட இறுதியில் வெளியிட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சிம்புவின் நடிப்பில் இந்த வருடம் வெந்து தணிந்தது காடு, கொரானா குமாரு என இரண்டு படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.