Thambi Durai : மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக பெற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ” திமுக தலைவர் ஸ்டாலின் , ஆரம்பத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என கூறினார்.
ஆனால் தற்போது பாதிக்கபட்ட இடங்களுக்கு சென்று பார்வையிடும் போது, தனது கட்சிகாரர்களை தூண்டிவிட்டுள்ளார்” என்று கூறினார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் ‘ பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடுகிறார்.
மேலும் புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது, மக்கள் என்ற பெயரில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.