விஜய் டிவி தொகுப்பாளர்களை விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார் நடிகை ஸ்ரீ ப்ரியா.
SriPriya Blast Vijay TV Anchors : டிவி நிகழ்ச்சிகள் என்றால் மக்களிடம் மட்டும் இல்லாமல் பிரபலங்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவரும் அறிவார்கள்.
இந்த நிலையில் அந்த தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை பிரபல நடிகை எதிர்த்து உள்ளார்.
மா. கா. பா. மற்றும் பிரியங்காவை ஸ்ரீ பிரியா விமர்சித்து சாடியுள்ளார்.
வெறித்தனம் சாதனைக்கு இது தான் காரணமா? – சர்ச்சையை ஏற்படுத்திய ஷாக்கிங் வீடியோ.!
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது :
மா. கா. பா. மற்றும் பிரியங்கா நீங்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் திறனை பார்த்து நான் வியந்து உள்ளேன்.
ஆனால், ஒருவரின் உடல் எடையை கொண்டு கிண்டல் செய்வது சரியானது இல்லை. நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்து கொள்ளுங்கள் ஆனால், மற்றவர்களை உருவ கேலி செய்வதை என்னால் ஏற்க முடியாது என்று தெரிவி்த்துள்ளார்.
நேரம் கிடைக்கும் சமையங் களில் நான் அதிகம் பார்ப்பது #விஜய்tv தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்…
மாற்றிக்கொள்வார்களா?1வரை கேலி செய்து comedy செய்வது கேவலம்!— sripriya (@sripriya) September 7, 2019
#vijaytvsupersinger ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,#makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்
— sripriya (@sripriya) September 7, 2019
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!
— sripriya (@sripriya) September 7, 2019