இனியும் கலாய்க்காதீங்க போதுமென அஸ்வினுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.
SR Prabhu Support to Ashwin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தவர் அஸ்வின். இவர் ஏற்கனவே பல ஆல்பம் பாடல் தமிழ் ஹீரோவாக நடித்திருந்தாலும் தற்போதுதான் வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்வக்கோளாறில் அஸ்வின் செய்த செயல்கள் பலரை திட்டித் தீர்க்க வைத்தது. ஒரு படம் கூட நடிக்கல அதற்குள் இவ்வளவு திமிரா என பலரும் அஸ்வின் பேச்சையும் நடவடிக்கையும் விமர்சனம் செய்தனர். இதனால் ஒரு கட்டத்தில் அஸ்வின் நான் ஏதோ ஆர்வக் கோளாறில் பேசி விட்டேன் என மன்னிப்பும் கேட்டார்.
ஆனாலும் தற்போது வரை அவரை கலாய்த்து மீம்கள் வெளிவருவது நின்றபாடில்லை. இப்படியான நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நிறைய Roles-லாம் நான் Avoid பண்ணேன் – Interview With Gurusomasundaram and Babu Thamizh.!
அந்த பதிவில் சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.