பிகில் படத்திற்கு இறுதி நேரத்தில் சிறப்பு காட்சிகள் இல்லை என கூறி இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.
ரசிகர்கள் அனைவருமே இந்த படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிகாலை காட்சிகளிலே படத்தை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இருந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இரண்டு படங்களுக்குமே சிறப்பு காட்சிகள் இல்லை என தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.