SPB சரண் அமெரிகாவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார். அதில் SPB பாடுவதாக இருந்தார்.
SPB Ilaiyaraja Friendship : இந்த நிலையில், இளையராஜா தன்னுடைய பாடலை என் அனுமதி இல்லமால் பாட கூடாது என்று அறிவித்து இருந்தார். இதனை கேட்ட SPB அதிர்ச்சி அடைந்தார். பிறகு இருவரும் பேசிக்கவில்லை.
தற்போது அவர்கள் மீண்டும் நல்ல நண்பர்களாகி உள்ளனர். இதனை பற்றி பத்திரிக்கையாளர்கள் SPB-ஐ கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது :-
“இளையராஜா அவர்களுக்கு, என்னுடைய நினைவு வர என்னை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அழைத்து உள்ளார். நான் அங்கு சென்றதும் என்னை கட்டி பிடித்தார். பிறகு, பழையபடி பேசி கொண்டோம்.
மேலும், இந்த பிரச்சனயை குடும்பத்தில் உருவாகும் பிரச்சனை போல என்றும், குடும்ப பிரச்சனை எப்படி தானாக சரியாக போய் விடுகிறதோ அது போல இதுவும் சரியாகி விட்டது. ” என்று தெரிவித்தார்.