SPB Health Status 20.08.2020 : பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருடைய உடல் தற்போது தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு தற்போது வென்டிலேட்டர் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும் பொழுது இதயத்திற்கு ரத்தத்தை உந்தித் தள்ள முடியாத சூழ்நிலை இன் பொழுது இந்த எக்மோ கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

எக்மோ கருவியானது ஏறத்தாழ செயற்கை நுரையீரலை போல செயல்பட்டு இதயத்திற்கு தேவையான ரத்தத்தை செலுத்துவதற்கு வழி செய்யும்.

நோய் தீவிரமாகபாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எக்மோ சிகிச்சை மூலம் பலர் பூரணமாக குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த சிகிச்சையின் மூலம் பாடகர் எஸ்.பி.பி குணமடைந்து வீடு திரும்புவார் என்ற எண்ணத்துடன் ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்கள் வேண்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.