SP Charan Gives A Clarity And Update About SPB‘s Health Status
இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் லேசான அறிகுறிகளுடன் இருந்த எஸ்பிபி உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மோசம் அடைந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து சில தினங்களாக எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில் இன்று எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் பூரண குணம் அடைந்து விட்டதாகவும் இறுதியாக எடுக்கப்பட்ட கொரானா டெஸ்டில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாகவும் தகவல் பரவியது.
இது குறித்து தற்போது சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் அப்பா கொரானா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் அது உண்மையல்ல. எஸ்பிபி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்து வருகிறார். தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். தினமும் மாலையில் மருத்துவர்களிடம கலந்து ஆலோசனை செய்து விட்டு அப்பாவின் உடல்நிலை குறித்த தகவல்களை நான் வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி பூரண குணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் தற்போது சரண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி அடைந்தனர். அவர் குணமடைந்து விட்டதாக வெளியான தகவல் விரைவில் உண்மையாகவே வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.