Soorarai Pottru : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று.
இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.
வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் இப்படத்தின்கதை ஒரு உண்மை சம்பவம் என்பதால் இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பை பொதுமக்கள் அதிகம் கூடும் ரியல் லொகேஷனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகரின் படப்பிடிப்பை அப்படி நடத்துவது பெரும் ரிஸ்க்.
எனினும் இயக்குனர் விடாப்பிடியாக பொது இடத்தில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்கிறாராம். சூர்யாவோ என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி வருகிறாராம்.
சூரரைப் போற்று படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர்.
மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.