போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழ் நடிகை சோனியா அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

Sonia Agarwal Clarification About Arrest Issue : கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் தம்முடைய வீட்டில் 40 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக பரிசோதனையின் போது கண்டு பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர்.

விராட் கோலியை, பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா : ஐசிசி ரேங்க் அறிவிப்பு

இதனால் நடிகை சோனியா அகர்வால் திடீர் கைது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் உண்மை தெரியாத சில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வால் தான் கைது செய்யப்பட்டதாக தகவலை பரப்பியது.

“மங்காத்தா” Chain-னின் ரகசியம் 10 வருடங்கள் கழித்து வெளியானது…! | Ajith | Mangatha | Tamil Cinema

இதனால் கடும் கோபத்திற்கு மன உளைச்சலுக்கும் ஆளாகி சோனியா அகர்வால் சோனியா அகர்வால் நான் இல்லை. முதலில் யார் என்பதை உறுதி செய்துகொண்டு செய்தியை வெளியிடுங்கள். அல்லது என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு தவறாக என்னுடைய பெயரை பயன்படுத்தி தகவலை பரப்புகின்றனர்.

சமூக வலைதள வதந்திகளை எண்ணி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் இது தீவிரமான விஷயம் என்பதால் உண்மை அறிந்து செய்தி வெளியிடுகள். நான் தற்போது கேரளாவில் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறேன். என்னை பற்றி தவறான தகவலை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.