விஜய் தொடர்ந்து அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சி குறித்து பேசியுள்ளார்.
Sobha Chandrasekar About Political Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் வெகு விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் நேரம் வரும்போது அரசியல் இயக்கமாக மாறும் என தெரிவித்திருந்தார்.
அவர் கூறியபடி நேற்று தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
தளபதி விஜய் தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளார் என தகவல் பரவிய நிலையில் இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த கட்சியில் என்னுடைய ரசிகர்கள் சேர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் என்னுடைய பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
தளபதி விஜய் இவ்வாறு கூறியதை தொடர்ந்து அவருடைய அம்மா ஷோபா இது குறித்து பேசியுள்ளார்.
அதாவது அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி.
கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை.
அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். எஸ் ஏ சி தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் விலகிட்டேன். விஜய் தன் அப்பாவுடன் பேசி வெகு காலமாகி விட்டது என தெரிவித்துள்ளார்.