சினேகா இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதை பிரசன்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அதன் பின்னர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டவர் சினேகா.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த சினேகா சமீபத்தில் தான் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
மேலும் இவர் இரண்டாவது முறை கற்பமாகவும் இருந்து வந்தார். இந்நிலையில் சினேகாவிற்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பிரசன்னா மகிழ்ச்சியுடன் தை மகள் வந்தாள் என ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
— Prasanna (@Prasanna_actor) January 24, 2020