12 வருட திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் புல் ஸ்டாப் வைக்கப் போவதாக வெளியான தகவலுக்கு சினேகா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி புன்னகை அரசியாக மக்களின் மனதில் தற்போது வரை மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகும் நிலையில் விவாகரத்து பெற்று புதிய போவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் இருந்து வருகின்றன.

இப்படியான நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சினேகா பிரசன்னாவுடன் சேர்ந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவில் என்றைக்கும் என்னுடைய பர்ஃபெக்ட் நீதான் என தன்னுடைய காதலை வெளிப்படுத்தி விவாகரத்து சர்ச்சைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதே சமயம் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.