சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்காலிகமாக எஸ்கே 21 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய பரிமாணமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.