SK 15 Update : கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் .
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது Mr . லோக்கல் படத்தை தொடர்ந்து நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து இரும்புத் திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இப்படத்தில் கல்யாணி பிரியதிர்ஷன் நாயகியாக நடிக்க; நாச்சியார் படத்தில் நடித்த இவானா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
தற்போது இந்த படத்தின் பாடல் சேர்க்கைக்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஆகியோர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்கள் .
இதனை யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.
#SK15 composing journey starts now 🙂 ???????????? @Psmithran @irfanmalik83 pic.twitter.com/4SEgXG5vmg
— Yuvanshankar raja (@thisisysr) February 25, 2019