SJ Suryah in Upcoming Movie

ஒரு படத்தின் முதல் பாதி கதையை மட்டும் 10 மணி நேரம் அசந்து போய் கேட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா.

SJ Suryah in Upcoming Movie : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தளபதி விஜய்யை வைத்து குஷி, தல அஜித்தை வைத்து வாலி என மிகப் பெரிய படங்களை கொடுத்தவர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் திறமையை வெளிப்படுத்தினார். இதனையடுத்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு என அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார்.

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மார்க் ஆண்டனி என்ற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மாநாடு 2 என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கிரிக்கெட் டுடே- இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் : ரிக்கி பாண்டிங் விருப்பம்

தற்போது இது குறித்த சுவாரஸ்யத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பொதுவாக படங்களின் கதையை கேட்பதில் அதிக ஆர்வம் கொண்ட எஸ் ஜே சூர்யா இந்த படத்தின் முதல் பாதி கதையை மட்டும் கிட்டதட்ட பத்து மணி நேரம் ரசித்து ரசித்து கேட்டுள்ளார். பிறகு இரண்டாம் பாதி கதையையும் கேட்டு முடித்துவிட்டு அடக்கடவுளே எல்லா நல்ல கதையும் என்னை தேடியே வருகிறதே என சந்தோஷப்பட்டு உள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனால் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா திரைப்பயணத்தில் மார்க் ஆண்டனி திரைப்படமும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.