எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேலைகள் நடந்து வருவதால் அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

SJ Surya Decision on Controversy : தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக பல்வேறு படங்களில் கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் இவரை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் முடிவு செய்து எஸ் ஜே சூர்யாவுக்கு ஒரு கோடி முன்பணமும் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க முடியாத காரணத்தினால் எஸ் ஜே சூர்யா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க தயாரிப்பாளர் இப்போதைக்கு வேண்டாம் வைத்துக் கொள்ளுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு இப்போது அந்த பணத்திற்கு வட்டி போட்டு பல மடங்கு பணத்தை அதிகமாக கேட்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் எஸ் ஜே சூர்யா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என சொல்வதால் அவர் சினிமாவில் நடிக்க முடியாதபடி ஐக்கிய ரெட் கார்டு வாங்கிக் கொடுக்க வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடுப்பான எஸ் ஜே சூர்யா ரெட் கார்டு கொடுத்தால் கொடுக்கட்டும் நான் ஒரு டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.