சென்னையில் ஒரு வீட்டில் 7 வருடத்துக்கு வெறும் ரூபாய் 15 வாடகை செலுத்தி வந்துள்ளார் சிவகுமார்.
Sivakumar‘s Old Home Photo : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் சிவகுமார். இவரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி.
இன்று சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் சிவகுமார் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய முயற்சியால் முன்னேறியவர்.
ஹீரோவாகவும் துணை கதாபாத்திரங்களிலும் பக்தி படங்களிலும் நடித்து வந்தவர்.
இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ஏழு வருடங்கள் மாதம் வெறும் 15 ரூபாய் வாடகை செலுத்தி வாழ்ந்து வந்துள்ளார்.
வெறும் டவலை மட்டும் கட்டி கொண்டு போஸ் கொடுத்த யாஷிகா – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.!
தற்போது அந்த வீட்டின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு… 7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்… ஓவியக்கல்லூரி 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்…. இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள் என கூறியுள்ளார்.