Sivakumar : மீண்டும் சிவகுமார் ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். பக்தி படங்கள் முதல் காதல் படங்கள் வரை இவர் எவ்வளவோ வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இன்றைய முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தையான இவர் ஏற்கனவே கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞனின் போனை தட்டி விட்டு பெரும் சர்ச்சையுள்ளாகினார்.
அதன் பின்னர் இதற்காக வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு புது போனையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சிவகுமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது போட்டோ எடுக்க முயன்றவரின் போனை தட்டி விட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் சிவகுமாரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
Again Started #Sivakumar ???????? pic.twitter.com/sBRvuuzQn8
— Dhanush karthi (@_itz_Dhanush) February 7, 2019