Actor Karthi : சிவகுமார் செல்பி எடுப்பவர்களின் செல்போனை தட்டி விடுவது குறித்து கார்த்தி முதல் முறையாக விளக்கமளித்துள்ளர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தேவ் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நடிகர் கார்த்தியும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி பேட்டி ஒன்றில் சிவகுமார் செல்போன்களை தட்டி விட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,
அதற்கு கார்த்தி ஒருவர் அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது தவறான ஒன்று. அதனால் தான் அப்பா மொபைலை தட்டி விட்டார்.
மீண்டும் செல்போனை தட்டி விட்ட சிவக்குமார் – வைரலாகும் வீடியோ.!
ஆனால் அதற்காக அவரை மீ டூ அளவிற்கு விமர்சிப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. இது ஒரு புறம் இருந்தாலும் அப்பாவும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.