வெங்கட் பிரபு இயக்க போகும் “NC22” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் பூஜையில் சர்ப்ரைசாக சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி இருவரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் வெங்கட்பிரபு. இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படம் தான் “NC22”. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருக்கிறார்.
“NC22″என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூர்த்தி தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்களாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபுவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரானா டகுபதி இருவரும் அந்தப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.