இயக்குனர் பாலாவின் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்யும் உதவி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.
Sivakarthikeyan Helps to Director Bala : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்கள் திரையுலகில் பிரபலம் அடைய இவருடைய படங்கள் தான் காரணம் என கூறலாம்.
இயக்குனர் பாலா இறுதியாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கி இருந்தார். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவானது.
ஆனால் இப்படம் கொஞ்சமும் அர்ஜுன் ரெட்டி படத்தோடு ஒத்துப் போகாததால் தயாரிப்பு நிறுவனம் இதை குப்பையில் தூக்கி போட்டது. இதனால் இயக்குனர் பாலா மிகவும் நொந்து போனார்.
தற்போது இதிலிருந்து மீண்டு அடுத்ததாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாலாவின் அடுத்த ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.