ரஜினிகாந்த் படத்திலிருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
ரஜினிகாந்த் இருபது நிமிடம் மட்டுமே இடம் பெறும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க சிவகார்த்திகேயனை தேர்வு செய்யலாம் என ரஜினி ஐடியா கொடுக்க அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் கால்சியல் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியவில்லை கூறி விலகிக் கொண்டுள்ளார்.
இதனால் இந்த வாய்ப்பு நடிகர் அதர்வாவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் நடிகர் அதர்வா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.