இந்த படம்னா எனக்கு சம்பளமே வேணாம் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளார் சிவா.
சின்னத்திரையில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக, தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நாயகனாக கலக்கு கலக்குவென கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டடித்தது. மேலும் தற்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்டுகிறது.
இந்நிலையில் நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் சயின்ஸ்பிக்சன் படத்திற்கு சம்பளமே வேணாம் என கூறியுள்ளார்.
இந்த படம் நிதி நெருக்கடியினால் பாதியில் நின்றதால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளார். மேலும் 70 % படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதி படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
ஒரு படத்தை கருத்தில் கொண்டு சம்பளம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறி இருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விசியமே.