புதிய படங்கள் குறித்து சிவகார்த்திகேயன் கண்டிஷன் நன்றி கூற இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sivakarthikeyan Conditions to New Directors : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும் காமெடி நடிகராகவும் வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து புதிய படங்களின் கதைகளை கேட்க ஆர்வமாக இருந்து வருகிறார்.
மேலும் அவர் தன்னிடம் கதை கூற அவரும் இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளார். அதாவது தனக்கு நிறைய இளம் ரசிகர்கள் இருப்பதால் தன்னுடைய படங்களில் தயவுசெய்து தண்ணி அடிப்பது, தம் அடிப்பது போன்ற காட்சிகள் அறவே வேண்டாம். அதுபோன்ற காட்சிகள் இல்லாமல் கதையை அமைக்குமாறு கூறி உள்ளார்.
இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுக்கடைகளை வைத்து பல்வேறு காட்சிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் சிவகார்த்திகேயன் இப்படிக் கூறியிருப்பது இயக்குனர்களை கொஞ்சம் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.