நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் கொரானாவை வெல்வோம் என சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Sivakarthikeyan About Corona Awareness : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தொற்றால் தமிழகத்திலும் நாளொன்றுக்கான பாதிப்பு 35,000-ஐ தாண்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். நான் முதல் டோஸ் போட்டுக்கிட்டேன், நீங்களும் போட்டுக்கோங்க.
வெளியே போகும் போது தனிமனித இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்றுங்க. நம்மையும் நாட்டையும் காப்போம். கொரானாவை வெல்வோம் என பேசியுள்ளார். சிவகார்த்திகேயனை போல சத்யராஜ் அவர்களும் பேசிய விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.