மெர்சல், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த சிட்டுக்குருவி பாட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.
Sittu Kuruvu Patti About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களில் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் விஜயுடன் மெர்சல் படத்திலும் இணைந்து நடித்திருந்தவர் சிட்டு குருவி பாட்டி.
வயதான காலத்திலும் தன்னுடைய சொந்த உழைப்பில் சாப்பிட வேண்டும் என்னால் முடிந்ததை என் குடும்பத்திற்கும் பேர பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டும் என ஆசைப்படுவதாலே படங்களில் நடிக்கிறேன் என டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்.
இந்த பாட்டி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் கடவுள் தான்.. தங்கமான மனசு. அவரை போல இன்னொருத்தர் இந்த உலகத்துல பிறக்க முடியாது என கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டி ஒன்றில் விஜய் தம்பி அமைதியா இருக்கும், அவர் கிட்ட பேசணும்னு நினைச்சா கூட அவர் கூட இருக்கிற பாடி கார்ட்ஸ் பேச விடமாட்டாங்க, அஜித் தம்பி அதுவா வந்து பக்கத்துல உட்கார்ந்து மனசார பேசும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.