அண்ணாத்த படத்தின் ரிலீசுக்கு பிறகு ரஜினி என்ன சொன்னார் என்பது குறித்து சிறுத்தை சிவா பேட்டி அளித்துள்ளார்.

Siruthai Siva About Annaththe Success : திரையுலகின் ஒளிப்பதிவாளராக பயணத்தைத் தொடங்கி இன்று இயக்குனராக கலக்கி வருபவர் சிறுத்தை சிவா. நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம் விசுவாசம் மற்றும் விவேகம் என தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார்.

பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது : இன்று ஜனாதிபதி வழங்கினார்

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவை இயக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் சூர்யா மற்ற படங்களில் பிசியாக இருப்பதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். கடந்த தீபாவளி விருந்தாக நான்காம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் இரண்டே நாளில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

படம் பார்த்து அழுதுட்டேன்! – Annaatthe Day 5 Family Audience Review | Rajinikanth, Nayanthara | HD

இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடிக்கடி பேசுகிறேன். அப்படி பேசும்போது ரஜினிகாந்த் சிவா சார் படம் பெரிய சக்சஸ்னு சொல்றாங்க, நாம ஜெயிச்சிட்டோம் என அவர் கூறினார். ரஜினிகாந்த் சார் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என பெருமையாக கூறியுள்ளார் இயக்குனர் சிவா.

மேலும் இவர் அளித்த இன்னொரு பேட்டியில் தளபதி விஜய்யை இயக்க பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அவருக்காக பல கதைகளை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.