10 லட்சம் பணத்திற்காக விஜயா செய்ய போகும் வேலை ஒரு பக்கம் இருக்க முத்துவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பாட்டி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி ஒரு கடையை பார்த்து கடை பிடித்திருக்கு, இந்த கடை எல்லாத்துக்கும் சூப்பரா செட் ஆகும் என தன்னுடைய தோழியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு கடை ஓனர் வந்து 30,000 வாடகை பத்து மாசம் வாடகையை அட்வான்ஸ்ஸா கொடுத்துடனும் என சொல்ல ரோகிணி நாளைக்கு பணத்தை கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். பிறகு ரோகிணியின் தோழி பணத்துக்கு என்ன பண்ண போற என கேட்க அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு, இப்போதைக்கு பியூட்டி பார்லருக்கு என்ன பெயர் வைக்கலாம்னு மட்டும் யோசி என சொல்கிறார்.

மறுபக்கம் அண்ணாமலை மீனாவிடம் நாளைக்கு நீங்க ஊருக்கு போறீங்க என சொல்கிறார். பிறகு அவர் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது முத்து வந்து பாட்டியா என கேட்க பிறகு அவர் முத்துவிடம் நாளைக்கு நீயும் மீனாவும் பாட்டி ஊருக்கு போயிட்டு ஒரு 4 நாள் இருந்துட்டு வாங்க என சொல்ல இவளோடவா நான் போகல என முத்து மறுப்பு தெரிவிக்க பிறகு அவரது பாட்டி பேச மறுக்க முடியாமல் ஓகே சொல்கிறார். ‌‌‌‌

பிறகு முத்து தன்னுடைய நண்பர்களுடன் பாட்டி வீட்டுக்கு போறேன் என சொல்ல அவர்கள் போயிட்டு சந்தோஷமா இருந்துட்டு வா என சொல்கின்றனர். அவளை கூட்டிட்டு போறேன் எங்க சந்தோஷமா இருக்கிறது என முத்து புலம்புகிறார்.

இன்னொரு பக்கம் விஜயா பார்வதி வீட்டுக்கு சென்று ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டது, ஒரு வழியாக முத்து ஊருக்கு போக ஓகே சொல்லிட்டான். ஆனா இன்னொரு பிரச்சனை என ரோகினி பணம் கேட்ட விஷயத்தை பற்றி சொல்ல எனக்கு தெரிஞ்ச பைனான்ஸ் கம்பெனி ஒன்னு இருக்கு அங்க உன்னோட வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கிக்கலாம். வட்டியையும் பணத்தையும் கட்டி விட்டு பத்திரத்தை மீட்கலாம் என சொல்ல விஜயா முதலில் பயப்பட பிறகு வேறு வழி இல்லாமல் சரி என சொல்கிறார்.

அதன் பிறகு மீனாவும் முத்துவும் ஊருக்கு கிளம்ப விஜயா சந்தோஷப்பட அண்ணாமலை தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு கிளம்பிட்டாங்க என சொல்ல அவர் வரும்போது அவங்க ரெண்டு பேரும் நரம்பும் சதையுமா ஒண்ணா சேர்ந்து தான் வருவாங்க என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.