sushmita
மாமியார், கணவரின் வரதட்சணை கொடுமையால் பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Singer Sushmitha Suicide : என்னதான் சமூகம் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் சாதி பபிரச்சனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை போன்ற பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் தற்போது கன்னட திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகி சுஷ்மிதா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் மாமியார், கணவரின் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளர். இந்த மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னர் தன்னுடைய சகோதரருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ்அப் மெசேஜில் மாமியார், கணவரின் கொடுமை நாளுக்கு நாள் தாங்க முடியவில்லை. என்னுடைய தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம், அவர்களை விட்டு விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sushmita Suicide