Thalapathy Vijay

விஜயால் நாட்டில் நடக்கும் அநியாயங்களை பொறுக்க முடியவில்லை என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் நடித்து முடித்துள்ள சர்கார் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சிங்கமுத்து அவர்கள் அளித்த பேட்டியில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

விஜய் எப்போதும் அமைதியானவர். அவர் அமைதியாக திட்டம் போட்டு நாட்டை மாற்ற எதோ புரட்சி செய்ய உள்ளார். பொதுவாக விஜய் பேச மாட்டார். பேச வேண்டிய அவசியம் வந்தால் அவரால் பொறுக்க முடியாது. பேசி தீர்த்து விடுவார் என கூறியுள்ளார்.

அவரால பொறுக்க முடியாம தான் சில வசனங்கள் வெளியில வருது. இன்னும் நெறைய இருக்கு எனவும் கூறியுள்ளார். மேலும் அவர்கிட்ட அறிவு இருக்கு, இளமை, துடிப்பு, வேகம், நிர்வாகத்தை நடத்தும் திறமையிருக்கு. அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என கூறியுளளார்.

Singa Muthu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.