பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியன் செல்வன். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 29ஆம் தேதியான இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதை படக்குழு அதிகாரவபூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் மற்ற பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நிலையில் இதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.