மாநாடு வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Simbu Thanks to Fans for Maanadu Success : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படம் ரிலீசுக்கு முன்பு வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கண் கலங்கி அழுதார்.
சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..
இந்த நிலையில் மாநாடு திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வசூலிலும் வேட்டையாடி வருகிறது. இத்தனைக்கும் காரணமான ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் அவர் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இசை வெளியீட்டு விழாவில் நான் சிந்திய கண்ணீரை கீழே விடாமல் தாங்கிப் பிடித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். உலகம் முழுவதும் வெறியாய் வெறித்தனமான வெற்றியை பெற்றுக் கொடுத்து உள்ளீர்கள். உங்களது அன்பிற்கு நான் அடங்கி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP
மேலும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். நன்றி என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்வது என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.