Simbu Plan After Maanaadu

மாநாடு படத்தை முடித்த பிறகு சிம்புவின் திட்டம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Simbu Plan After Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வந்த இவர் ஷூட்டிங்கிற்கு வருவதில்லை சரியாக நடித்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

இதனால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்து வந்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என 2 படங்களில் கமிட்டாகியுள்ளார்.

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிவடைந்து ரிலீஸக்கு தயாராகி வரும் நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக சிம்பு ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாக இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவுடன் கௌதம் கார்த்திக் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் தொடங்கியது. ஆனால் சிம்பு சரியாக சூட்டிங்கிற்கு வரவில்லை என்ற காரணத்தினால் படக்குழு இப்படத்தை கைவிட்டது.

இந்த நிலையில் தற்போது சிம்பு மாநாடு படத்தை முடித்துக் கொடுத்த பிறகு கைவிடப்பட்ட மஃப்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஃப்டி பட ரிமேக்கும் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.