சிம்பு விட்டதை மீண்டும் கையில் எடுத்துள்ளார், நிச்சயம் இது பேச கூடிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர் சிம்பு.. எப்போதும் சர்ச்சைக்குள்ளவே இருந்தாலும் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.
சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் ஷூட்டிங் தொடங்கமாலேயே கைவிடப்பட்டது.
இதனையடுத்து சமீபத்தில் இப்படம் பற்றிய பஞ்சாயத்து நடந்தது. அப்போது சிம்புவின் அம்மா என் மகன் ஷூட்டிங்கிற்கு வருவார் என வாக்கு கொடுத்தார்.
இதனையடுத்து இந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது .