சிம்பு சபரி மலை செல்ல முடிவெடுத்து மாலை அணிந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.
என்னதான் சர்ச்சை நாயகனாக வலம் வந்தாலும் ரசிகர்கள் பலம் ஒரு போதும் குறைந்ததே இல்லை, தற்போதும் கூட சிம்பு ஷூட்டிங்கிற்கு வருவதில்லை, சரியாக நடித்து கொடுப்பதில்லை என குற்றசாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனாலும் அவரது ரசிகர்கள் உனக்காக நாங்க இருக்கோம், நீ வா தல என அவரை தினம் தினம் சமூக வலைத்தளங்களின் மூலமாக உற்சாகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் ஆசைப்படியே நல்லவொரு மாற்றம் உருவாக வேண்டும் என சிம்பு சபரி மலை ஐயப்பனுக்காக 40 மாலை அணிந்துள்ளார், 40 நாள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க உள்ளாராம்.
அதன் பின்னரே படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.