முதல் படம் கைவிடப்பட்டது தொடர்ந்து மீண்டும் சிம்புவுக்கு புதிய கதை ஒன்றை கூறியுள்ளார் பிரபல இயக்குனர் .
Simbu in Vijay Chandar Director : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் ஜமீல் என்பவர் இயக்கத்தில் மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சிம்புவும் கௌதம் கார்த்திக் இணைந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கன்னடத்தில் செம ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தனர்.
இனி சிம்புவுக்கு கல்யாணம் ஆகுறது இவர் கையில் தான் இருக்கு – டி.ஆர் பேட்டி.!
மேலும் இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கி வந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படம் திடீரென கைவிடப்பட்டது.
இதனையடுத்து தற்போது விஜய் சந்தர் மீண்டும் சிம்புவுக்கு வேறு ஒரு புதிய கதையை உருவாக்கி கூறியுள்ளார். இதனால் விரைவில் இவர்களுக்கு கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரானா பிரச்சனை, முழு ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்களும் இந்த கூட்டணிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.