தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு கிளம்பியுள்ளார் சிம்பு.
Simbu in Sabarimala Trip : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு கிளம்பியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.