வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் குறித்து சிம்பு எமோஷனலாக பேசியது வைரல் ஆகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கவுள்ளது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ஆம் தேதியான நேற்று பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிட்டியில் மாலை 5:30மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்து மாஸ் காண்பித்த சிம்பு தனது ரசிகர்கள் குறித்து எமோஷனலாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், “உடம்பில் எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் பிளட் டெஸ்ட் தான் செக் பண்ணுவாங்க. எனது இந்த உடம்பில் உள்ள ரத்தத்தில் அவங்க தான் இருக்காங்க. அதனால என் ரத்தமும் உடம்பும் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை” என்று தனது ரசிகர்களை பற்றி வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் எமோஷனலாக நடிகர் சிம்பு பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.