Simbu and Nayanthara : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.
இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
மேலும் நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தில் சிம்பு இருந்தால் தான் நடிக்க மாட்டேன் என மணிரத்னம் கூறிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிரத்னம் இந்த தகவலை சிம்புவிடம் சொல்ல, சிம்புவோ பெருந்தன்மையுடன் விலகிவிட்டாராம்.
அதனால்தான் சிம்பு இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் 800 கோடியில் இருந்து 1000 கோடியைத் தொடுமாம்.
இதன்மூலம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் எனும் சிறப்பு சாதனையை இப்படம் நிகழ்த்தவுள்ளது.
எனினும் மனம் தளராத மணிரத்னம் தற்போது ரிலையன்ஸ் உதவியுடன் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டதாம்.