kalyani Priyadarshan : பிரபல இயக்குநர் பிரியதர்ஷனோட மகளான கல்யாணி போன வருஷம் தெலுங்கில வெளியான ஹலோ படம் மூலமா நாயகியா அறிமுகமாகியிருந்தாரு.
அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறலைனாலும் கல்யாணியோட வசீகர நடிப்பு எல்லோரையும் கவர்ந்திருந்தது.
இதைதொடர்ந்து கல்யாணி பிரயதர்ஷனோட கவனம் இப்போ தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருக்கு.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஜோடியா ஹீரோ படத்திலையும் துல்கர் சல்மான் ஜோடியா வான் படத்திலையும் நடிச்சிட்டு வர்ற கல்யாணி இப்போ அடுத்ததா சிம்புவோட மாநாடு படத்திலையும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்காங்க.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கில் நிதின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியாகி தெலுங்கு ஊடகங்களில் வைரலாக பரவத் துவங்கியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணி, என் அடுத்த படத்தை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எல்லாம் உறுதியான பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.. அதுவரை பொறுமை காக்கவும் என டிவீட் செய்துள்ளார்.
தமிழில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருவதால் இவரை தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என்றும் பலர் ஆருடம் கூறுகிறார்கள்.